Saturday, December 27, 2008

பேராசிரியர்.பெரியார்தாசன், தோழர்.அழகரசன் நிகழ்ச்சி


பெரியார் திராவிடர் கழக தலைவர்கள் தோழர்.பேரா.பெரியார்தாசன் அவர்களும், தோழர்.கடலூர் அழகரசன் அவர்களும் அண்மையில் குவைத்திற்கு வருகைபுரிந்தனர்.
தமிழ்நாடு பொறியாளர் குழுமத்தின் அழைப்பின் பேரில் தோழர்.பெரியார்தாசனும், அவரோடு இணைந்து சொந்த விருப்பத்தின் பேரிலும், தோழர்.வடலூர் ஆறுமுகத்தின் ஆதரவிலும் தோழர்.அழகரசனும் வந்திருந்தனர். இப்பயணத்தின் போது இவர்களிருவரும் தமிழ்நாடு பொறியாளர் குழுமம், தமிழோசை கவிஞர் மன்றம், பெரியார் நூலகம், மற்றும் நமது தமிழர் சமூகநீதி பேரவையின் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
01.09.08 அன்று மாலை குவைத் வந்தடைந்த இவர்களை இவ்வமைப்பினர் அனைவரும் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.
02.09.08 அன்று தமிழ்நாடு பொறியாளர் குழும நிகழ்ச்சியிலும்,
03.09.08 அன்று காலை தமிழோசை கவிஞர் மன்ற கூட்டத்திலும் பங்கேற்றப்பின்னர்,
03.09.08 அன்று வெள்ளிக்கிழமை மாலை, மிர்காப் தஞ்சை உணவகத்தில் தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்தினை தோழர்.பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் பாடினார். இக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை த.ச.பேரவையின் து.தலைவர் வயி.பி.மதியழகன் வரவேற்றார்.
இதையடுத்து தோழர்.செந்தில்குமார் அவர்கள் "இணைந்தோம் உலகத் தமிழராய் நாங்கள் இணைந்தோம்" என்ற பாடலை பாடினார். அடுத்ததாக, முன்னிலை வகித்த தோழர். வளநாடன் அவர்கள் உரையாற்றினார், பின்னர் தோழர்.சுப்பிரமணியன் எழுச்சிப் பாடல் ஒன்றை பாடினார்.
அவரைத் தொடர்ந்து தோழர்.வடலூர் ஆறுமுகம் அவர்கள் உரையாற்ற, தோழர். இராமகிருட்டிணன் எழுச்சிப் பாடல் ஒன்றை பாடினார். இதையடுத்து தொழர்.சரவணன் அவர்கள் தான் இயற்றிய பெரியார் பற்றிய கவிதயை படித்தப் பின்னர் தலைமையுரையாற்றினார்கள்.
அதயடுத்து, பொறியாளர் முத்துக்குமார் அவர்கள் த.ச.பேரவையின் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் -2005 என்ற தமிழக அரசால் வெளியிடப்பட்ட கையேட்டினை வெளியிட தோழர்கள் பெரியார்தாசனும் அழகரசனும் பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து தோழர்.கடலூர்.அழகரசன் அவர்கள் உரையாற்றினார்கள். அடுத்து தோழர்.செந்தில்குமார் ஒரு எழுச்சிப் பாடலை பாடினார். நிறைவாக தோழர்.பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள் உரையாற்றினார்கள்.
அடித்ததாக, விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. தோழர்கள் .தமிழ்நாடன், அனவர் அலி, இரா.க.சரவணன், நாஞ்சில் சுரேசு ஆகியோர் தொழர்கள். அழகரசன், பெரியார்தாசன் இருவருக்கும் நினைவுப்பரிசினை வழங்கினர். இதயடுத்து, இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் சார்பில் அதன் அமைப்பாளர் தோழர். மரு.அன்வர் பாட்சா அவர்களும், தோழர்.முபாரக் ரசுவி அவர்களும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினர்.
தமிழ்.காம் இதழின் சார்பில் தோழர். லுக்மான் அவர்கள் பேரா.பெரியார்தாசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்கள்.
ஓவியர். கொண்டல்ராசு அவர்கள், நிகழ்ச்சியினிடையே தோழர் அழகரசன் அவர்களை ஓவியமாக வரைந்து பரிசளித்தார்கள்.
விருந்தினர்களோடு அனவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, இரவு உணவையும் முடிக்க, விழா இனிதே நிறைவுற்றது.

No comments: