Monday, July 14, 2008

சிந்தனையாளனில் தமிழர் சமூகநீதி பேரவை நிகழ்ச்சி தொகுப்பு


நன்றி : சிந்தனையாளன் சூலை -2008

பெரியாரியல் அறிஞர் தோழர்.வே.ஆனைமுத்து அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "சிந்தனையாளன்" சூலை-2008 இதழில் தமிழர் சமூகநீதி பேரவையின் முதல் மூன்று கருத்தரங்கங்களின் நிகழ்ச்சி தொகுப்பை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

Tuesday, July 1, 2008

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் - ஒரு வரலாற்றுப் பார்வை - சிறப்புக்கருத்தரங்கம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை

இடம் : எல்லைப்போராளி ம.பொ.சி. அரங்கம்
நாள் : ஆடவை திங்கள் 13ம் நாள் (27.06.2008)

தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் “உலக சுற்றுச்சூழல் நாள்”, ம.பொ.சி நூற்றாண்டு, உ.வே.சா., தியாகி விசுவநாத தாசு, காயிதே மில்லத், கக்கன் ஆகியோரின் பிறந்தநாள், பெருஞ்சித்தரனார் நினைவு நாள், நெல்ல எழுச்சியின் நூற்றாண்டு ஆகியவற்றை நினைவுகூறும் விதமாக, “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற சிறப்புக் கருத்தரங்கத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று, கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்க த.ச.பேரவையின் து.செயலர் தோழர் நிலவன் அவர்களையும் முன்னிலை வகிக்க த.ச.பேரவையின் ஆலோசகர் தோழர்.பழ.கிருட்டிணமூர்த்தி அவர்களையும், சிறப்பு அழைப்பாளராகவும் கருத்தரங்கத்திற்கு சிறப்புரையாற்றவும் பொறிஞர்.இளங்கோவன் அவர்களையும் மேடைக்கு அழைத்தார் த.ச.பேரவையின் தலைவர் தோழர்.தமிழ்நாடன் அவர்கள்.

தலைமையேற்ற தோழர் நிலவன் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி நிகழ்ச்சியை தொடங்கினார்கள். இன்றைய கருத்தரங்கத்தின் நோக்கத்தையும், அரங்கில் ஒட்டப்பட்டிருந்த தமிழ்த்தலைவர்களின் சிறப்புக்களையும் கூறி முதல் அமர்வின் முதல் பேச்சாளராகப் பேச த.ச.பேரவையின் து.தலைவர் தோழர் வயி.பி.மதியழகன் அவர்களை அழைத்தார்கள்.

தோழர் வயி.பி.மதியழகன் தனது உரையில், ஊமைத்துரையின் போராட்ட வரலாற்றைக் கூறி அவை இந்திய விடுதலைபோரில் அவை சரியாகப் பதிவு செய்யப்படாததையும், அதற்கு தமிழர்களும், தமிழக அரசும் முயற்சி எடுக்கவேண்டும் என்று கூறினார்கள். அடுத்து வ.உ.சியின் ஆங்கில அரசு எதிப்பு போராட்டத்தினையும் தியாகி விசுவநாத தாசின் சிறப்புக்களையும் விரிவாக எடுத்துக் கூறி இச்செய்திகளை பகிர்ந்து கொள்வதின் நோக்கத்தையும், அவற்றை நாம் உள்வாங்கி செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் கூறி விடைபெற்றார்கள்.

இதைத் தொடர்ந்து தோழர்.செந்தில்குமார் அவர்கள் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இயற்றிய "உலகத் தமிழர் பண்" பாடலை எழுச்சியோடு பாடினார்கள்.

அடுத்த பேச வந்த த.ச.பேரவையின் பொ.செயலாளர் தோழர்.இரா.க.சரவணன் அவர்கள், ம.பொ.சியின் எல்லைப் போராட்டத்தையும் கக்கன் அவர்களின் தூய்மையான அரசியல் வாழ்வினையும் விளக்கிக் கூறினார்கள்.

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் தமிழ்ப்பணிகளையும், அரசியல் சிறப்புக்களையும் த.ச.பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர். அமானுல்லா அவர்கள் தனது உரையில் எடுத்துரைத்தார்கள்.

அரசியல் ஆளுமைகள் குறித்த கையேட்டினை த.ச.பேரவையின் பொருளாலர் தோழர்.நாஞ்சில் சுரேசு அவர்கள் வெளியிட தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் தோழர்.அன்பரசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இதையடுத்து தோழர்.இராமகிருட்டினன் அவர்கள் எழுச்சிமிக்க பாடலைப்பாட, தோழர். பழ.கிருட்டிணமூர்த்தியின் முன்னிலை உரையோடு முதல் அமர்வு நிறைவுற்றது.

முதல் அமர்வின் தீர்மானங்களை தோழர்.இரா.க.சரவணன் அவர்கள் படிக்க பலத்த கரவொலி எழுப்பி அரங்கத்தினர் அனைவரும் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றினர்.
அரசியல் ஆளுமைகள் ஒரு வரலாற்றுப்பார்வை அமர்வின் தீர்மானங்கள்:
1. தமிழகத்தின் பரவலான இடங்களில் வரலாற்று ஆளுமைகளுக்கு
மணிமண்டபங்கள் எழுப்பி அவற்றுள் நூலகங்கள், உடற்பயிற்ச்சிக்கூடம்,
கண்காட்சிக்கூடங்களை ஏற்படுத்தி அவைகளை இளம் தலைமுறை
பயனுறும் விதமாக சமுதாய நலக்கூடங்களாக உருவாக்க வேண்டும்.

2. வரலாற்று நாயகர்களின் பணிகளையும் சிறப்பியல்களையும் உள்ளடக்கிய
வாழக்கை வரலாற்று நூல்களை தமிழக அரசின் சார்பில் வெளியிட்டு,
தமிழர்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்க வேண்டும். இவற்றை
மென்னூலாக்கி இணைதளத்திலும் வெளியிட தமிழக அரசினை வலியுருத்துகிறோம்.

3. தமிழ் மொழி இனப் போராளிகளின் பெயரில் அனைத்து பள்ளி,
கல்லூரிகளிலும் சிறப்பு மையங்களை ஏற்படுத்தி பேச்சுப் போட்டி,
கட்டுரைப்போட்டிகள் போன்றவற்றை ஆண்டுதோறும் நடத்தி
பரிசுகள் வழங்கி மாணவர்களிடத்தில் மொழி, இன உணர்வை
வளர்க்க தமிழக அரசினை இத்தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.

4. வறிய நிலையில் வாடும் தமிழறிஞர்கள், மொழிப்போராளிகளின்
குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களின்
எண்ணிக்கைக்கேற்ப திங்கள் தோறும் உரூபா. 10, 000/ மும்
அதற்கு மேலும் தமிழக அரசு வங்கவேண்டும். அதே போன்று
இவர்களின் மருத்துவ செலவுகளையும் கல்விச் செலவுகளையும்,
வேலை வாய்பினையும் வழங்க வேண்டுமாய் தமிழக அரசினை
வலியுருத்துகிறோம்.

5.கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வினையும், எரிபொருள்
உயர்வினையும் கட்டுப்படித்தி ஏழைகளின் குறைந்த அளவு வாழ்வியல்
தேவைகளை உறுதிப்படுத்திட வேண்டுமாய் மைய மாநில அரசினை
வலியுறுத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


இரண்டாம் அமர்வின் தொடக்கமாக "Hell for leather" என்ற ஆவணப்படத்தை தோழர்.சித்தார்த் அவர்கள் திரையிட்டு அது கூறும் சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளையும், அதன் பாதிப்புக்களையும் விளக்கி "யாதும் ஊரே, யாதும் கேளீர்" என்ற மொழியக் கேட்டுக்கொண்ட தேவதேவனையும் மேற்கோள் காட்டினார்கள்.

இதையடுத்து சுற்றுச்சூழல் குறித்த கையேட்டினை தோழர்.தமிழ்நாடன் வெளியிட பொறிஞர்.இளங்கோவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

தோழர்.சுகந்த் பிரியதாசன் அவர்களின் கவிதையைத் தொடர்ந்து,பேச வந்த தோழர்.தமிழ்நாடன் அவர்கள், சுற்றுச்சூழல் தினம் அய்க்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத் துறையின் சார்பாக கொண்டாடப்படுவதின் நோக்கத்தையும், அது சார்ந்து செயல்படும் தமிழர்களை அறிமுகப்படுத்தி அதே போன்று நாம் அனைவரும் செயல்படக் கேட்டுக்கொண்டார்கள். அதையடுத்து சுற்றுச்சூழல்நாள் உறுதிமொழியினை படிக்க அரங்கத்தினர் அனைவரும் உடன் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதினால் ஏற்படும் விளைவுகளையும் தடுக்கும் வழிமுறைகளையும் கூறி தனது உரையை முடித்துக்கொள்ள, இரண்டாம் அமர்வின் தீர்மானங்களை த.ச.பேரவையின் து.பொருளாலரும், செயற்குழு உறுப்பினருமான தோழர். முனு.சிவசங்கரன் அவர்கள் படிக்க அரங்கத்தினர் கரவொலி எழுப்பி தீர்மானங்களை ஆதரித்தனர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமர்வின் தீர்மானங்கள்:
1. தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டினை குறைத்தும், சுற்றுச்சூழல்
மாசுபடுத்தும் காரணிகளை தடுத்தும் வளமான எதிர்காலத்தை
உருவாக்கப் பாடுபடுவோம்.

2. மரம் வளர்க்கவும், காடு, மலை, ஆறுகள் உள்ளிட்ட இயற்கை
வளங்களைப் பேணிப் பாதுகாக்கவும் உறுதியெடுப்போம்.

3. மரபுசாரா எரிசக்திகளான சூரியஒளி, காற்று, சாண எரிவாயு
போன்றவற்றை இயன்ற அளவில் அதிகமாக பயன்படுத்த
உறுதி ஏற்ப்போம்.

4. தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுக்காக்கும் பணிகளைச் செய்திட
உறுதியெடுப்போம்.

5. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடும் அனைத்து
நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவோம்.

நிறைவாக சிறப்புரையாற்ற வந்த பொறிஞர். இளங்கோவன் அவர்கள், தமிழர் சமூகநீதி பேரவையின் செயல்பாடுகளைப் பாராட்டி அது செயல்பட வேண்டியப் பாதையையும், அதற்கான தேவையையும் கூறினார்கள். அதே போன்று இன்றைய நிகழ்வினையும் விரிவாக ஆய்ந்து அதன் சிறப்புக்களைக்கூறி அதற்காக தமது பாராட்டுதலையும் ஆதரவினையும் வழங்கினார்கள். தனது உரையின் போது தமிழகத்தில் கல்விக்கென வாடும் ஏழைச்சிறுவர்களுக்கு தாம் செய்து வரும் தொண்டினையும், அதைக் கண்டு பெரும் எண்ணிக்கையிலான நண்பர்கள் தங்களது பொருளுதவினை நல்கி ஆதரிப்பதையும் கூறி, தமிழ்ச்சமூகம் இன்றளவும் பெரும் உதவிகள் தேவைப்படுகிறது எனவும் அதற்கென வெளிநாடுகளில் வசிக்கும் நம் போன்ற தமிழர்கள் உதவிட வேண்டியதன் அவசியத்தைகூறி அதற்காக தாம் ஒரு பாலமாக இருந்து செயல்படப் போவதாகவும் கூறினார்கள்.

கருத்தரங்க வெளியீடுகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தோழர்.செந்திகுமார் அவர்கள் எழுச்சிமிக்க பாடலைப்பாட அனைவருக்கும் சிற்றுண்டி பறிமாறியபின் தோழர்.நாஞ்சில் சுரேசு நன்றி உரையாற்ற
விழா இனிதே நிறைவுற்றது.