Tuesday, November 4, 2008

பெரியார் பிறந்தநாள் விழா - கருத்தரங்கம்


தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா 06.09.08 அன்று "சமூகநீதி போராளி தந்தை பெரியார்" அரங்கில் (இந்தியன் முகலாய் உணவகம், பாகீல்) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

த.ச.பேரவையின் பொதுச் செயலாளர் இரா.க.சரவணன் வரவேற்புரை ஆற்றினார்கள். எழுத்தாளர் வளநாடன் தலைமையேற்க, த.ச.பேரவையின் இணைச்செயலாளர் க.இரகமத்துல்லா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக நிலவனும் பட்டுக்கோட்டை சத்யாவும் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

அதைத் தொடர்ந்து, க.இரகமத்துல்லா அவர்கள் த.ச.பேரவையின் சின்னத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்கள்.

அவரைத்தொடர்ந்து வடலூர் ஆறுமுகம் அவர்கள் பெரியார் சிறப்புக்களை விளக்கும் விதமாக உரையாற்றினார்.

அடுத்ததாக, இரா.க.சரவணன் அவர்கள் த.ச.பேரவையின் கொள்கை விளக்கக் கையேட்டினை வெளியிட்டு உரையாற்றினார். கொள்கை விளக்க கையேட்டினை பெற்றுக் கொண்டு பேராசிரியர். தாஜுதீன் அவர்கள் உரையாற்றினார்.

அடுத்ததாக இரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
பிறகு, உமைரி நாசர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினரும் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழக தலைவருமாகிய பேராசிரியர், முனைவர். சவாகிருல்லா அவர்களுக்கு த.ச.பேரவையின் தலைவர் தமிழ்நாடன், புலவர்.கருணனந்தம் எழுதிய பெரியார் வரலாற்று நூலை நினைவுப் பரிசாக அளித்தார்கள்.

அதைத் தொடர்ந்து சமூகநீதிக் காவலர் பெரியார் என்ற தொகுப்பு நூலை த.ச.பேரவையின் அவைத் தலைவர் அன்வர் அலி வெளியிட, பேரா.முனை. சவாகிருல்லா பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

விழா நிறைவாக த.ச.பேரவையின் பொருளாளர் நாஞ்சில் சுரேசு நன்றியுரை ஆற்றினார்.

முன்னதாக த.ச.பேரவையின் துணைத்தலைவர் வயி.பி.மதியழகன் சிற்றிதழ்கள் கண்காட்சியினையும், த.ச.பேரவையின் து.செயலாளர் நிலவன் பெரியார் ஆவணக் கண்காட்சியினையும் திறந்து வைத்தனர்.
இக்கண்காட்சியில் ஏராளமான சிற்றிதழ்களும், பெரியார் நூல்களும், பெரியார் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.

விழாவினை நிலவன் சிறப்பாக தொகுத்தளிக்க இனிதே நிறைவுற்றது.

குறிப்பு : பேரா.முனை.சாவாகிருல்லா உரையும், கண்காட்சி விபரங்களும் தனியே தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.