Friday, August 8, 2008

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும், தமிழ்மொழி மீட்டுருவாக்கம், கல்வி முறையும் களவு போகும் உரிமையும் - சிறப்புக் கருத்தரங்கம்

மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும்தமிழ் மொழி மீட்டுருவாக்கம்கல்வி முறை - களவுபோகும் உரிமைசிறப்புக்கருத்தரங்கம் த.ச.பேரவையின் அய்ந்தாவது சிறப்புக்கருத்தரங்கம் கல்வி போராளி காமராசர் அரங்கில் த.ச.பேரவையின் பொருளாலர் நாஞ்சில் சுரேசு வரவேற்புரையோடு துவங்கிற்று.
த.ச.பேரவையின்பொதுச்செயலாளர் இரா.க.சரவணன் தலைமையேற்க, பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினரும் து.செயலாளருமாகிய அன்வர் அலி முன்னிலை வகித்தார்.

நிகழ்வின் தொடக்கமாக தோழர் நிலவனும் தொழர் பட்டுக்கோட்டை சத்யாவும் தமிழ்தாய் வாழ்துப்பாடினர். அதைத் தொடர்ந்து முதல் அமர்வான மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும் துவக்கமாக தோழர் செந்தில் குமார் "இணைந்தோம் உலகத் தமிழராய் இணைந்தோம் என்ற உலகத் தமிழர் பண் பாடினார்.

த.ச.பேரவையின் து.தலைவர் வயி.பி.மதியழகன் மக்கள் எழுச்சியும் மலரும் நினைவுகளும் என்ற தலைப்பில் எழுச்சிமிக்க உரையைத் தொடர்ந்து த.ச.பேரவையின் து.செயலாளர் நிலவன் உலகபோராளி நெல்சன் மண்டேலா என்ற தலைப்பில்எழுச்சிமிக்க கவிதை படித்தார்.

இதையடுத்து த.ச.பேரவையின் செயற்குழு உறுப்பினர் தோழர். கி. திருமுருகன் "தில்லைச் சமரில் வென்றது தமிழ்" என்ற கையேட்டினை வெளியிட தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் தோழர். அழ.பாண்டிச்செல்வம் பெற்றுக் கொண்டார்கள்.

முதல் அமர்வின் தீர்மானங்களை தோழர். மணிவாசகம் அவர்கள் படிக்க அரங்கத்தின் பலத்த கரவொலியோடு நிறைவேற்றபட்டது.முதல் அமைவை நிறைவு செய்யும் விதமாகவும் இரண்டாம் அமர்வை தொடங்கும் விதமாகவும் தோழர் செந்தில் குமார் எழுச்சி மிக்க பாடலை பாடினார்கள்.

அதை தொடர்ந்து தோழர் பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் என்ற தலைப்பில்சீரிய உரையாற்றினார்கள். தமது உரையின் போது தமிழ் மொழி சிறக்கவும், தமிழ் மொழி சிறக்கவும் தமிழை மீட்டுருவாக்கம் செய்யவும் மறைமலையடிகள், செய்குத்தம்பி பாவலர், சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆற்றிய தொண்டினையும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினையும் எடுத்துக் கூறினார்கள்.

தோழர் செந்தில்குமாரின் எழுச்சி மிக பாடலைத் தொடர்ந்துகருத்தரங்க வெளியீடாக தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பை த.ச.பேரவையின் செயற்குழு உறுப்பினர் தோழர். அப்துல் கனிவெளியிட இந்திய யூனியன் முசுலிம் லீக்கின் அமைப்பாளர்மருத்துவர் அன்வர் பாசா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

அடுத்துப் பேச வந்த த.ச.பேரவையின் தலைவர் தோழர் தமிழ்நாடன் அவர்கள் "கல்வி முறையும் களவு போகும் உரிமையும்" என்றதலைப்பில் இன்றைய கல்வி முறையின் சீர்கேட்டினையும், அதனை மாற்றி அமைக்க வேண்டியதன் அவசியத்தையும்எடுத்துக் கூறியதோடு தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தையும் விளக்கிக் கூறினார்கள்.

இக்கருத்தரங்கத்தின் சிறப்புரை நிகழ்த்திய இந்திய யூனியன் முசுலிம் லீக்கின்அமைப்பாளர் தோழர். அன்வர் பாசா அவர்கள், காமராசர்அவர்கள் தமிழகத்திற்கும் தமிழர்களின் கல்விக்கும் ஆற்றியதொண்டினையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள்.

இதையடுத்து தோழர் வித்யாசாகர் அவர்கள் பழங்குடிமக்களின் வாழ்வையும் வேதனைகளையும் தனது கவிதயின்மூலம் வெளிப்படுத்தினார்கள்.
இரண்டாம் அமர்வின் தீர்மானங்களை தோழர். நிலவன் படிக்க அரங்கத்தினர் கரவொலி எழுப்பி நிறைவேற்றினர்.

இரண்டாம் அமர்வின் நிறைவாக தோழர் செந்திகுமார் அவர்கள்எழுச்சிமிகு பாடலை பாடினார்கள்.

நிறைவாக தோழர். இரா.க.சரவணன் கருத்தரங்கத்தின் பொதுத்தீர்மானங்களை நிறைவேற்றி, கறுப்பு சூலை, அணுசக்தி உடன்பாடு உள்ளிட்ட பல அரசியல்நிகழ்வுகளை குறித்து சிறப்புர விளக்கி தலைமையுரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு சிற்றுண்டியும் கருத்தரங்க வெளியீடுகளும்வழங்கப்பட்டது.

தோழர் அன்வர் அலியின் நன்றியுரையோடு நிகழ்ச்சிகள் இனிதேநிறைவுற்றது.

No comments: